Varalakshmi Nonbu 2021 வரலட்சுமி நோன்பு 2021

வரலட்சுமி நோன்பு பற்றிய சில அடிப்படை செய்திகளைப் பார்த்தோம்.ஏன் இந்த வரலட்சுமி நோன்பை பெண்கள் தங்கள் கணவரின் ஆயுளுக்காக இருக்கிறார்கள் என்று ஒரு கேள்வி வரும்.

திருமணத்தின் போது ஒரு அற்புதமான மந்திரம். அது மந்திரம் என்று சொல்லமுடியாது. ஒரு அருமையான சுலோகம். மங்கலநாண் சூடும் பொழுது சொல்லப்படுகின்றது .

மாங்கல்யம் தந்துனானே

மமஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி ஸுபகே

த்வம ஜீவ சரதஸ்சதம்’ என்னும் குறித்த மந்திரத்தின் பொருள்

 மங்கலமான பெண்ணே! உன் திருக்கழுத்தில் நான் என்னுடைய உயிருக்குச் சமானமாக மமஜீவன ஹேதுநா என்று சொல்லி  இந்த மங்கல நாணை சூட்டிக்கொண்டு நூறாண்டு காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும்.

என் இல்லத்துணைவியாக என் சுகதுக்கங்களில் பங்கேற்று நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக’ என்பதாகும்.

அந்த வரத்தை ஆண்டுதோறும் உறுதி செய்வதற்காக மகாலட்சுமியிடம், தன்னுடைய கணவருக்கு வாழ்நாளையும், நல்ல ஆரோக்கியத்தையும், குடும்ப அமைதியையும், அன்னியோன்னியத்தை  வேண்டி இந்த விரதம் இருக்கின்றார்கள்.

.

மகாலட்சுமி தாயார்,  வரலட்சுமியாக,  நம்முடைய இல்லத்துக்கு விரும்பி வருகின்ற நாள் இந்த வரலட்சுமி விரத நாள்.

Leave a Reply

Your email address will not be published.